General28 July 2026

எல் நினோ தாக்கத்தால் நான்கு மாகாணங்கள் வறட்சி ஏற்படும் அபாயத்தில்

எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான காலநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வட மாகாணம், வடமத்திய மாகாணம், ஊவா மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் ஆகியவை எல் நினோ தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலை மிகவும் தீவிரமான எல் நினோ நிலையாக வளர்ச்சி பெற்றால், அடுத்த மாதம் கடுமையான வறட்சி நிலவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அடுத்த ஆண்டு வீழ்ச்சியடையும் மழைவீழ்ச்சி, நீர் உலர்வது மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற பல சுற்றுச்சூழல் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக, பொதுமக்கள் நீர் மற்றும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தங்களது சுகாதாரம் குறித்து அவதானமாக இருக்குமாறும், வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கு முன்கூட்டியே தயாராகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் உடல் வெப்பம் சற்று அதிகமாக உணரப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes