General29 July 2026

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் இன்று

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் இன்று (29) கொழும்பில் நடைபெறவுள்ளது.

சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது எல்லையை நீடிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் முன்னெடுக்கவுள்ள அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்தாலோசிக்கப்படவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes