General29 July 2026

வளிமண்டலவியல் திணைக்களம் அதிரடி எச்சரிக்கை!

இலங்கையின் பல கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையான மற்றும் கற்பிட்டி முதல் முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வியாழக்கிழமை காலை 11 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes