குடும்பத் தகராறு காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர், அதனால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் என மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்புருபிட்டிய பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் உயர் அழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்புக்குச் சொந்தமான கோபுரமொன்றில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தேவேந்திரமுனை, மாவறல மற்றும் தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் காவல்துறையினர் குறித்த நபரின் குடும்பத்தினரைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததையடுத்து, அவர் கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.
இதனையடுத்து, உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த சம்பவத்தால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பைக் கணிப்பிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கம்புருபிட்டிய காவல்துறையினருக்கு மாத்தறை தலைமை நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபரை 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
நேற்றுமுன்தினம் (28) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நிலவிய மின்வெட்டு காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 201,059.90 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.
விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கம்புருபிட்டிய பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் உயர் அழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்புக்குச் சொந்தமான கோபுரமொன்றில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தேவேந்திரமுனை, மாவறல மற்றும் தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் காவல்துறையினர் குறித்த நபரின் குடும்பத்தினரைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததையடுத்து, அவர் கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.
இதனையடுத்து, உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த சம்பவத்தால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பைக் கணிப்பிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கம்புருபிட்டிய காவல்துறையினருக்கு மாத்தறை தலைமை நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபரை 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
நேற்றுமுன்தினம் (28) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நிலவிய மின்வெட்டு காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 201,059.90 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.
விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Latest News
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு
Local
30 July 2026
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் அஜிங்கிய ரஹானே!
Local
30 July 2026
பெற்றோர்களைப் பதற வைக்கும் செய்தி : 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று
Local
30 July 2026
ஆகஸ்ட் 12 முழு சூரிய கிரகணம்: நேரலை செய்கிறது நாசா!
Local
30 July 2026
'ஜனநாயகன்' உலகளவில் ரூ.255 கோடிக்கும் மேல் வசூல் – 7 நாட்களில் புதிய சாதனை
Local
30 July 2026
நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு
Local
30 July 2026
கனகராயன்குளம் பகுதியில் விபத்து- இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
Local
30 July 2026
தனுஷின் அரசியல் வருகை? – வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவிட்ட நெகிழ்ச்சி பதிவு!
Local
30 July 2026
2026 உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடர்: அர்ஜென்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை
Local
30 July 2026
நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் நிறைவடையும் தருவாயில்!
Local
30 July 2026