குடும்பத் தகராறு காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர், அதனால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் என மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்புருபிட்டிய பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் உயர் அழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்புக்குச் சொந்தமான கோபுரமொன்றில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தேவேந்திரமுனை, மாவறல மற்றும் தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் காவல்துறையினர் குறித்த நபரின் குடும்பத்தினரைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததையடுத்து, அவர் கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.
இதனையடுத்து, உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த சம்பவத்தால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பைக் கணிப்பிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கம்புருபிட்டிய காவல்துறையினருக்கு மாத்தறை தலைமை நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபரை 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
நேற்றுமுன்தினம் (28) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நிலவிய மின்வெட்டு காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 201,059.90 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.
விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கம்புருபிட்டிய பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் உயர் அழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்புக்குச் சொந்தமான கோபுரமொன்றில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தேவேந்திரமுனை, மாவறல மற்றும் தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் காவல்துறையினர் குறித்த நபரின் குடும்பத்தினரைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததையடுத்து, அவர் கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.
இதனையடுத்து, உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த சம்பவத்தால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பைக் கணிப்பிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கம்புருபிட்டிய காவல்துறையினருக்கு மாத்தறை தலைமை நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபரை 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
நேற்றுமுன்தினம் (28) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நிலவிய மின்வெட்டு காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 201,059.90 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.
விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Latest News
நடிகர் கவின் வீட்டில் இரட்டை மகிழ்ச்சி : திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து!
Local
30 July 2026
ஒரு தந்தையாக என் கடமை... : மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சி செய்தி!
Local
30 July 2026
ஹரக் கட்டா உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பயங்கரவாதத் தடுப்புச் சட்ட கீழான வழக்கை முன்னகர்த்த முடியாது – நீதிமன்றம் உத்தரவு
Local
30 July 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் நியமனம்!
Local
30 July 2026
நீர்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
30 July 2026
நாசா செயற்கைக்கோள் படப்பிடிப்பில் சிக்கிய விசித்திரம் : விஞ்ஞானிகளின் அவசர எச்சரிக்கை!
Local
30 July 2026
நாட்டின் சில பகுதிகளில் நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
Local
30 July 2026
தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய திட்டங்கள்
Local
30 July 2026
ஆகஸ்ட் 3 ஆம் திகதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Local
30 July 2026
அமெரிக்கா - ஈரான் பதற்றம்: போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அவசர அழைப்பு!
Local
30 July 2026