International30 July 2026

ஆகஸ்ட் 3 ஆம் திகதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறி, அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் அரசைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் திகதி காலை 10.00 மணியளவில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் முக்கிய மையமான தஞ்சாவூரில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்து வரும் அரசின் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், விவசாயிகளின் உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes