கொழும்பு துறைமுகத்துக்கு மேற்கே உள்ள கடல் பகுதியில் வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 வெற்று கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட நெட்டாங்கு 06° 54' மற்றும் கிழக்கு அகலாங்கு 079° 32' ஆகியவற்றுக்கு அருகிலுள்ள கடல் பகுதியிலேயே குறித்த கொள்கலன்கள் விழுந்துள்ளன.
நிலவும் காற்றோட்டம் மற்றும் நீரோட்டங்களின் திசைக் காரணமாக, இந்த கொள்கலன்கள் தற்போது சிலாபம், நீர்கொழும்பு மற்றும் பேருவளை ஊடாக காலிக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளை நோக்கித் தெற்கு திசையில் மிதந்து செல்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொழும்பிலிருந்து பேருவளை ஊடாக காலி வரையிலான தெற்கு கடல் பிராந்தியங்களில் தொழிலில் ஈடுபடும் மற்றும் பயண செய்யும் அனைத்துக் கடற்றொழில் படகுகளும் இது தொடர்பில் தீவிரக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
படகுகள் மீது இந்தக் கொள்கலன்கள் மோதுவதன் மூலம் பாரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், கடலில் பயணிக்கும்போது கடற்றொழிலாளர்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மிதந்து செல்லும் இந்தக் கொள்கலன்கள் ஏதேனும் கண்களுக்கு புலப்பட்டால், அது குறித்து உடனடியாகக் கடற்றொழில் திணைக்களத்தின் வானொலி தொடர்பு நிலையத்துக்கு அறிவிக்குமாறு அனைத்து கடற்றொழிலாளர்களிடமும் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட நெட்டாங்கு 06° 54' மற்றும் கிழக்கு அகலாங்கு 079° 32' ஆகியவற்றுக்கு அருகிலுள்ள கடல் பகுதியிலேயே குறித்த கொள்கலன்கள் விழுந்துள்ளன.
நிலவும் காற்றோட்டம் மற்றும் நீரோட்டங்களின் திசைக் காரணமாக, இந்த கொள்கலன்கள் தற்போது சிலாபம், நீர்கொழும்பு மற்றும் பேருவளை ஊடாக காலிக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளை நோக்கித் தெற்கு திசையில் மிதந்து செல்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொழும்பிலிருந்து பேருவளை ஊடாக காலி வரையிலான தெற்கு கடல் பிராந்தியங்களில் தொழிலில் ஈடுபடும் மற்றும் பயண செய்யும் அனைத்துக் கடற்றொழில் படகுகளும் இது தொடர்பில் தீவிரக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
படகுகள் மீது இந்தக் கொள்கலன்கள் மோதுவதன் மூலம் பாரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், கடலில் பயணிக்கும்போது கடற்றொழிலாளர்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மிதந்து செல்லும் இந்தக் கொள்கலன்கள் ஏதேனும் கண்களுக்கு புலப்பட்டால், அது குறித்து உடனடியாகக் கடற்றொழில் திணைக்களத்தின் வானொலி தொடர்பு நிலையத்துக்கு அறிவிக்குமாறு அனைத்து கடற்றொழிலாளர்களிடமும் கோரப்பட்டுள்ளது.
Latest News
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
03 August 2026
ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து பெண் பலி!
Local
03 August 2026
மலையக மக்களுக்கு காணி உரிமை; புதிய ஒப்பந்தங்களில் சேர்க்க எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
Local
03 August 2026
20 வருட காதல் இரகசியம் சொன்ன சூர்யா
Local
03 August 2026
மேட்டூருக்கு பாயும் காவிரி நீர் : முதலமைச்சர் விஜய் "கடவுளின் குழந்தை..." - உற்சாகத்தில் பொதுமக்கள்!
Local
03 August 2026
சீரற்ற வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Local
03 August 2026
களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்
Local
03 August 2026
மின்சாரக் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
Local
03 August 2026
2,400 வகை பக்டீரியாக்களின் இருப்பிடம் : மனித உடலில் இருக்கும் இரகசிய உலகம்!
Local
03 August 2026
களனி கங்கையை அண்மித்த சில பகுதிகளுக்குப் பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை!
Local
03 August 2026