General02 August 2026

எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட பணிக்குழாம் அமைக்குமாறு சஜித் கோரிக்கை!

எதிர்வரும் காலத்தில் ஏற்படக்கூடிய எல்நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வதற்காக விசேட பணிக்குழு ஒன்றை உடனடியாக அமைக்குமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சாத்தியமான இயற்கை அனர்த்தங்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், ஜனாதிபதியின் தலைமையில் இந்த பணிக்குழாம் அமைக்கப்பட்டு, அதனூடாக சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து செயற்பட முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes