General05 August 2026

2.5 மில்லியன் டொலர் விவகாரம்: விசாரணை முன்னேற்றத்தை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

மத்திய திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்ற சம்பவம் தொடர்பில், அரசாங்க நிதியியல் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பான எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (05) நடைபெறவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான அறிக்கை கடந்த மாதம் 10ஆம் திகதி அந்த குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன், மத்திய திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்ற சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றத்தை இன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes