General05 August 2026

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

குறித்த பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளில் தோற்றவுள்ள ஐந்து மாணவர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes