General06 August 2026

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் 7 மணிநேரம் நீர் விநியோகம் தடை

கொழும்பு பெருநகர் நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று (06) இரவு 10.00 மணி முதல் நாளை ( 07) அதிகாலை 5.00 மணி வரை 7 மணித்தியாலங்களுக்கு இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes