இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, சமூக சேவையாளர் கம்பம் ஜெயராஜுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்த விடயத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் இலங்கையை பாதித்த இயற்கை அனர்த்த காலத்தில் இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பங்களித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவையும் பாராட்டியுள்ளார்.
இதன்போது செந்தில் தொண்டமான் பல்வேறு கோரிக்கைகளையும் இந்திய நிதியமைச்சரிடம் முன்வைத்தார்.
அவற்றில், பெருந்தோட்ட மக்களுக்காக OCI (Overseas Citizen of India) அட்டையை கட்டணச் சலுகையுடன் அல்லது இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்புறுதி திட்டத்தின் பயன்களை இலங்கையில் லங்கா எல்.ஐ.சி. ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் அடங்கும்.
அத்துடன், தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல்வழிப் போக்குவரத்து சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, பயணிகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Latest News
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனங்கள் உயர்த்தப்படவில்லை: எரிபொருள் கொடுப்பனவே திருத்தப்பட்டது – பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர விளக்கமளிப்பு
Local
08 August 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக வீதியில் இறங்கத் தயாராகும் சட்டத்தரணிகள்
Local
08 August 2026
ஷானி அபேசேகர, பிரதிக் காவல்துறை மா அதிபராக தரமுயர்வு!
Local
08 August 2026
LPL 2026: கொழும்பு அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது காலி கெலண்ட்ஸ்!
Local
08 August 2026
உள்நாட்டில் ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு: வெள்ளை மாளிகை மண்டபக் கட்டுமானத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!
Local
08 August 2026
ஃபிஃபா தலைவரின் சொகுசு வாழ்க்கை: ட்ரம்ப் உடனான நெருக்கமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!
Local
08 August 2026
ஸ்பெயின் - இத்தாலி இடையே எல்லைக் கட்டுப்பாடுகள் தீவிரமடைகின்றன
Local
08 August 2026
இறுதி நாட்களில் டியாகோ மரடோனா மரணத்தை ஏற்கத் துணிந்தவராக செயற்பட்டார்.
Local
08 August 2026
2026 ஜூலையில் ரஷ்யாவுக்கு 42,800 இழப்புகள்: யுக்ரைன் தகவல்
Local
08 August 2026
தொலைபேசி எண் பெயர்வுத் திட்டம் செப்டம்பரில் ஆரம்பிக்கப்படாது: அரசாங்கம் விளக்கம்!
Local
08 August 2026