General11 August 2026

வாகன விபத்தில் தாயும் மகனும் பலி; ஒன்றரை வயது குழந்தை காயம்

தம்புள்ளை - மஹியங்கனை பிரதான வீதியின் பகமூண, தமனயாய பகுதியில் தனியார் பயணிகள் பேருந்தொன்றும் உந்துருளியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (11) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 63 வயதுடைய தாயாரும், அவரது 43 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த நபரின் ஒன்றரை வயதுடைய குழந்தையும் பலத்த காயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களுந்தேவ பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவொன்றுக்கு சென்று, மீண்டும் வீடு திரும்பிக் சென்றுகொண்டிருந்த போதே இவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த பேருந்து கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததுடன், அதற்கு முன்னால் சென்ற உந்துருளி தமனயாய பகுதியில் திரும்ப முற்பட்ட வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி பகமூண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes