General15 August 2026

வத்தளை மஹாபாகேவில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் : உயிர்சேதங்கள் பதிவாகவில்லை !

வத்தளை மஹாபாகேவில் உள்ள நகையகம் ஒன்றில் ஏற்பட்ட  தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புச் சேவையின் 2 தீயணைப்பு வாகனங்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் எவருக்கும் உயிர் ஆபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes