General16 August 2026

பல நூறாண்டுகள் மாறாத மரபு : நல்லூரை வந்தடைந்தது கொடிச்சீலை.

வட புலத்தின் குடும்ப விழாவாக கொண்டாடப்படும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவம், நாளைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

நூற்றாண்டுகளைக் கடந்து தொடரும் அந்தப் பாரம்பரியத்தின் முக்கியமான ஒரு நிகழ்வாக, நல்லூரானுக்குரிய கொடிச்சீலை இன்று முற்பகல் ஆலயத்தை வந்தடைந்தது.

நல்லூரானுக்குரிய கொடிச்சீலையை பாரம்பரியமாக வழங்கி வரும் செங்குந்தர் மரபினைச் சார்ந்தவர்களால், அந்தப் புனிதக் கொடிச்சீலை சிரசில் சுமந்து கொண்டு வரப்பட்டு, பின்னர் தேரில் வைத்து ஊர்வலமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்தது.

பாரம்பரியம் மாறாமல், வழிவழியாகப் பேணப்பட்டு வரும் இந்தச் சிறப்புமிக்க நிகழ்வு, நல்லூர் மகோற்சவத்தின் தனித்துவத்தையும் அதன் தொன்மையான மரபையும் மீண்டும் ஒருமுறை உலகறியச் செய்கின்றது.

இந்த நிலையில் நாளை காலை கொடியேற்றத்துடன், நல்லூரானின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes