International18 August 2026

60 நாட்கள் ஒப்பந்தம் நிறைவு: ஈரான்- அமெரிக்காவுக்கு இடையில் தீவிர பதற்றம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ளதால், நிலவும் போர் பதற்றங்கள் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுடனான நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்டும் முயற்சிகள் முடங்கியுள்ளதால், ஈரான் தனது இராணுவத்தை "முழுமையான தாக்குதல்" நிலைக்கு மாற்றவுள்ளதாக அந்த நாட்டின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை உடைக்க ஈரான் துல்லியமான இராணுவத் தாக்குதலை நடத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான தற்காலிக ஒப்பந்தத்தின் 60 நாள் கெடு முடிவடைந்துள்ளது.

ஹோர்;முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பான சர்ச்சையால் இந்த ஒப்பந்தம் முறிவடைந்ததுடன், தற்காலிக ஒப்பந்தத்தை நீடிக்கும் எண்ணம் அமெரிக்காவிற்கு இல்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில் ஹோர்முஸ் நீரிணைப் பாதையை நிர்வகிப்பது குறித்து ஓமானுடன் ஈரான் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், ஓமான் இதில் இடையூறாக இருந்தால் அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

உலகளாவிய மசகு எண்ணெய் நுகர்வில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றத்தால் பிரெண்ட் மசகுஎண்ணெய் விலை உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 89 டொலராக விற்பனையாகிறது.

இதனிடையே, பொப் அல்-மண்டெப் நீரிணை பகுதியில் ஏமனின் ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்களால் பிராந்தியப் போர் மேலும் விரிவடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes