International19 August 2026

காஸா நகருக்கு அருகே இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

காஸா நகருக்கு மேற்கே உள்ள துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள உணவகம் (f/Ng) ஒன்றைக் இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதலில், குழந்தை உட்படக் குறைந்தபட்சம் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக அல் ஜசீரா அரபிக் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதலின் தீவிரத்தின் காரணமாக, காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் சிலர் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes