இலங்கையில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டினால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதாகப் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, சிகரெட் பிடிப்பதால் நாட்டில் ஆண்டுக்கு 13,000 முதல் 20,000 பேர் வரை உயிரிழக்கின்றனர். அத்துடன், வாரத்திற்கு சுமார் 250 பேருக்குப் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டின் தரவுகளின்படி, 35,835 பேருக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 16,398 ஆண்களும் 19,457 பெண்களும் அடங்குவர்.
இதன்படி, கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் சிகரெட் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்படி, கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் சிகரெட் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
160 ரூபாய் பெறுமதியான சிகரெட் ஒன்றிற்கு அரசு 109 ரூபாய் வரியாக விதிக்கிறது. இவ்வாறு அரசு அதிகளவு வரி வருவாயைப் பெற்றாலும், நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் பெருமளவிலான சிகரெட்டுகள் இறக்குமதி செய்யப்படுவதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கவலை தெரிவித்தார்.
குறிப்பாக, பிரபல பிராண்டுகளின் பெயர்களில் சட்டவிரோத சிகரெட்டுகள் சிறிய கடைகளில் கூட விற்கப்படுவதாகவும், இது தொடர்பான சோதனைகளை மீறி இவை சந்தைக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
சிகரெட் பயன்பாட்டினால் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளைப் பெறுவதில் பெரும் பற்றாக்குறை நிலவுவதுடன், அதற்கான செலவுகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.
எனவே, சட்டவிரோத சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்றும், சிகரெட் வரிகள் மூலம் பெறப்படும் வருவாயில் ஒரு பகுதியை சுகாதார அமைச்சின் மூலம் புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைகளுக்காக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
Latest News
நந்தா மாலனியின் மறைவு :மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிப்பு!
Local
20 August 2026
வர்த்தக நிலையங்களில் பொருட்களுக்கான கொள்முதல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் : நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தல்!
Local
20 August 2026
இணுவிலில் மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!
Local
20 August 2026
“இதுவே எனது கடைசி உரையாக இருக்கலாம்” – சபையில் இராமநாதன் அர்ச்சுனா நெகிழ்ச்சி
Local
20 August 2026
நந்தா மாலனி காலமானார்
Local
20 August 2026
இராஜகிரிய பகுதியில் காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு
Local
20 August 2026
முஸ்லிம் தாதியர்களின் ஆடை விவகாரம் – நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா கேள்வி
Local
20 August 2026
திருப்பதியில் மொட்டை அடித்த நயன்தாரா? – வைரலாகும் நிழற்படத்தின் பின்னணியில் உள்ள உண்மை!
Local
20 August 2026
“சாரைப்பாம்பு மீது மண்ணெண்ணெய் ஊற்றியது போல துடிக்கிறார்கள்” – சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஆவேசம்!
Local
20 August 2026
தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவா? – ஜி.வி.பிரகாஷின் அதிரடி பதில்!
Local
20 August 2026