தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, 1931ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி தெலுங்கு மற்றும் கன்னடப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தார்.
1950ஆம் ஆண்டு வெளியான ‘ஷாவுகாரு’ (Shavukaru) என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தின் பெயரைத் தொடர்ந்து அவர் ‘சௌகார் ஜானகி’ என அழைக்கப்பட்டார்.
1952ஆம் ஆண்டு வெளியான ‘வளையாபதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான அவர், பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த தனது திரைப் பயணத்தில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
திரைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக தமிழக அரசு மற்றும் ஆந்திர மாநில அரசின் திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களை அவர் பெற்றுள்ளார்.
மேலும், கலைத்துறையில் அவர் ஆற்றிய வாழ்நாள் சாதனையைப் பாராட்டி, 2022ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., கலைஞர் மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய அரசியல் மற்றும் திரையுலக ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றிய பெருமையும் சௌகார் ஜானகிக்கு உண்டு.
இந்த நிலையில், அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
Latest News
வடக்கு தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்துச் சேவைகளில் பாதிப்பு
Local
28 August 2026
தமிழகத்தில் நலத்திட்டங்களை சொந்தப்பணத்தில் செய்யும் விஜய்?
Local
28 August 2026
உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டு அறிக்கையில், இலங்கைக்கு 120 ஆவது இடம்
Local
28 August 2026
இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறையவில்லை : பிரதமர் போட்டிக்களத்தின் முதல் மூன்று பேரில் விஜய்யும் உள்ளடக்கம்
Local
28 August 2026
பெண்கள், குழந்தைகளின் அந்தரங்க படங்களை பகிர்ந்தவர் கைது !
Local
28 August 2026
முன்னாள் ஆண் கிரிக்கெட் வீரர், அவுஸ்திரேலிய பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி!
Local
28 August 2026
இன்றும் எச்சரிக்கை நிலைக்கு செல்லும் வெப்பநிலை!
Local
28 August 2026
22 தொடர்பில் மீண்டும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
Local
28 August 2026
நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால், உயிர்த் தப்பியவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.
Local
28 August 2026
குத்துச்சண்டை போட்டாலும் , தொழிற்சாலை பணிகளில் சோம்பேறிகளான சீன ரோபோக்கள்
Local
28 August 2026