பெருந்தோட்டப்பகுதி மக்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்தும் நோக்கில், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் 66,000 மிரிகல் மீன் குஞ்சுகளை விடுவிக்க நுவரெலியா மாவட்ட தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழும், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்க மீனவர் சங்கத்தின் போக்குவரத்து பங்களிப்புடனும், உடவலவ மீன் இனப்பெருக்க மையத்தில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட மிரிகல் மீன் குஞ்சுகளே இவ்வாறு நீர்த்தேக்கத்தில் விடுவிக்கப்பட்டதாக நுவரெலியா மாவட்ட நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீர்த்தேக்கத்தில் விடுவிக்கப்பட்ட இந்த மீன் குஞ்சுகள் 9-10 மாத காலத்தில் 1 - 1 ½ கிலோகிராம் எடையில் வளரும் என்றும், அதன்பின் அதன் அறுவடையை நீர்த்தேக்கத்தின் மீன்பிடியாளர்கள் பெற்றுக்கொள்வர் என்றும் அவர்கள் கூறினர்.
அத்துடன், அவ்வாறு அறுவடை செய்யப்படும் மீன்கள் தோட்டப்பகுதி மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.
அந்த பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிகளிலும் நன்னீர் மீன்களுக்கு அதிக தேவை உள்ளதால், இதன் மூலம் நீர்த்தேக்க மீன்பிடியாளர்களின் பொருளாதார நிலையும் உயரும் என்று அலுவலர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Latest News
இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!
Local
23 August 2026
மட்டக்களப்பில் உந்துருளி விபத்து: இரு மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்!
Local
23 August 2026
ஹக்கலையில் பேருந்து மோதியதில் ஒருவர் பலி!
Local
23 August 2026
நாடு முழுவதும் வறட்சி உக்கிரம்: விவசாயம் பாதிப்பு - 72,000க்கும் மேற்பட்டோருக்குப் குடிநீர் விநியோகம்!
Local
23 August 2026
பொரளையில் வீடொன்றுக்கு முன்பாக கைக்குண்டு மீட்பு!
Local
23 August 2026
8 வருட இரகசிய சேமிப்பு - ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்
Local
23 August 2026
பங்களாதேஷை வீழ்த்தி ஒரு இன்னிங்சாலும் 51 ஓட்டங்களாலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி
Local
23 August 2026
ஐரோப்பிய பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித்தின் சிற்றூந்து விபத்து - நடந்தது என்ன?
Local
23 August 2026
மொனராகலையில் 7 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கஞ்சா கைப்பற்றல் - சந்தேகநபர் கைது!
Local
23 August 2026
நாட்டின் சுற்றுலா வருமானம் வீழ்ச்சி - வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் கணிசமாக அதிகரிப்பு
Local
23 August 2026