General24 August 2026

தீவிரமடையும் டெங்கு பரவல் - 94,000க்கும் அதிகமானோர் பாதிப்பு, 71 பேர் உயிரிழப்பு

நடப்பு ஆண்டில் நேற்று ( 23) நள்ளிரவு வரை 94,037 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாதாந்த அடிப்படையில் கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29,962 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

நாட்டின் மொத்த டெங்கு பாதிப்பில் 52.93 சதவீதமானவை மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன.

மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 20,034 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில், டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழித்து சுற்றாடலைத் தூய்மையாகப் பேணுமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை காய்ச்சல் அறிகுறிகள் தென்படின் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்
Related recommendation
Hiru TV News | Programmes