General25 August 2026

பஸ் லலித் 72 மணி நேரம் தடுப்புக் காவலில் விசாரிக்கப்படவுள்ளார்

டுபாயிலிருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் "பஸ் லலித்" என்ற லலித் கன்னங்கரவை 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

"பஸ் லலித்" டுபாயில் கைது செய்யப்பட்டு, இன்று காலை (25) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

சந்தேகநபரை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக கடந்த நாட்களில் இலங்கையிலிருந்து விசேட குழுவொன்று டுபாய்க்கு புறப்பட்டுச் சென்றிருந்தது.

இதற்கமைய, மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் குறித்த சந்தேகநபர் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes