நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் "முழுநாடும் ஒன்றாக" போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ், நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட முற்றுகைகளில் 726 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 3 சந்தேக நபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதுடன், ஏனையவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் போதைப்பொருள் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல்துறை அணுகுமுறையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்தல், தேவையைக் குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்துதல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் தடுப்புத் திட்டங்களைச் செயற்படுத்துதல் மற்றும் சமூகத்தைப் போதைப்பொருளுக்கு எதிராக வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மாஅதிபரின் பணிப்புரைகளுக்கு அமைய இந்தத் திட்டம் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
Latest News
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!
Local
28 August 2026
உயிரைக் காக்கும் அதிநவீன தொழில்நுட்பம்: கரப்பான் பூச்சிகளின் உடலில் மருத்துவ உபகரணங்கள் – விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் முயற்சி!
Local
28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்
Local
28 August 2026
கொழும்பில் அதிகரிக்கும் எலித் தொல்லை – மக்கள் அச்சம்
Local
28 August 2026
கையடக்கத் தொலைபேசி வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
Local
28 August 2026
நேபாளத்திற்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால நிவாரணம் அறிவிப்பு - அவுஸ்திரேலியா தீர்மானம்
Local
28 August 2026
நேபாள பேரிடர்: தொடர்ந்து கைகொடுக்கும் இந்தியா – இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!
Local
28 August 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம்
Local
28 August 2026
நவோதயபுரம் வீட்டுத்திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
Local
28 August 2026
தக்காளிக் குளியலில் திளைத்த ஸ்பெயின் - கோலாகலமாக நடைபெற்ற 'லா டொமாட்டினா' திருவிழா
Local
28 August 2026