வட நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 95 பேர் உயிரிழந்துள்ளதுடன், 484 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களில் 391 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 93 நேபாள பிரஜைகளும் அடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போன வெளிநாட்டவர்களில் 134 இந்தியர்கள், 47 அமெரிக்கர்கள், 33 பிரித்தானியர்கள் மற்றும் 34 அவுஸ்திரேலியர்கள் அடங்குவதாக நேபாள சுற்றுலா சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பாதுகாப்புப் படையினர் 88 பேரை மீட்டுள்ளதாக பாக்மதி மாகாண காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நேபாள இராணுவம் மற்றும் ஏனைய காவல்துறைப் பிரிவினர் இணைந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த வெள்ளப்பெருக்கில் ரசுவா மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், சந்தைகள், நீர்மின் திட்டங்கள், வீதிகள் மற்றும் ஏனைய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, நிலநடுக்கம் காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டு, அது போதே கோஷி நதிக்கரையில் வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தியதாக நேபாள வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேபாளத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்தியாவின் பீகார் மாநில அதிகாரிகளும் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
காணாமல் போனவர்களில் 391 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 93 நேபாள பிரஜைகளும் அடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போன வெளிநாட்டவர்களில் 134 இந்தியர்கள், 47 அமெரிக்கர்கள், 33 பிரித்தானியர்கள் மற்றும் 34 அவுஸ்திரேலியர்கள் அடங்குவதாக நேபாள சுற்றுலா சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பாதுகாப்புப் படையினர் 88 பேரை மீட்டுள்ளதாக பாக்மதி மாகாண காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நேபாள இராணுவம் மற்றும் ஏனைய காவல்துறைப் பிரிவினர் இணைந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த வெள்ளப்பெருக்கில் ரசுவா மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், சந்தைகள், நீர்மின் திட்டங்கள், வீதிகள் மற்றும் ஏனைய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, நிலநடுக்கம் காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டு, அது போதே கோஷி நதிக்கரையில் வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தியதாக நேபாள வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேபாளத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்தியாவின் பீகார் மாநில அதிகாரிகளும் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Latest News
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அபாரம்!
Local
28 August 2026
வேரறுக்கப்பட்ட பாரம்பரியம்: மேற்கு கரையில் ஒலிவ் மரங்களை அழித்த இஸ்ரேலிய குடியேறிகள்!
Local
28 August 2026
ஃபிஃபா தலைவருக்கு எதிராக சுவிட்ஸர்லாந்தில் வழக்கு -தயாராகும் ஆவணங்கள்!
Local
28 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல்
Local
28 August 2026
ஆயுள் தண்டனை பெற்றிருந்த பொஸ்னிய படையதிகாரி சிறைக்குள் மரணம்!
Local
28 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்ற ஈரான் - கட்டார் கூட்டுத் திட்டம்: தெஹ்ரானில் முக்கிய பேச்சுவார்த்தை!
Local
28 August 2026
நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கையிடமிருந்து நிவாரணப் பணிகளுக்காக 1 மில்லியன் டொலர் நிதியுதவி!
Local
27 August 2026
மாத்தறையில் தம்பதியர் கைது: ரூ. 70 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!
Local
27 August 2026
குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு விளக்கம்!
Local
27 August 2026
சுவிங்கம் பிரியரா நீங்கள் ? சைலிட்டால் இனிப்பூட்டி ஆபத்தானது தெரியுமா? இதயத்தைப் பதம் பார்க்கும் அதிர்ச்சித் தகவல்!
Local
27 August 2026