நுவரெலியா கிரெகரி வாவியின் நீரைப் பருகுவது மனிதர்களின் உயிருக்குக்கூட ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திட்டக் குழுக் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மலையகப் பகுதிகளில் இருந்து அடித்து வரப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பல்வேறு இரசாயனக் கழிவுகள் போன்ற மாசுப் பொருட்கள் நீண்ட காலமாக இந்த வாவியினுள் கலப்பதே கிரெகரி வாவியின் நீர் தீவிரமாக அசுத்தமடைந்துள்ளமைக்கு முக்கிய காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, வாவியின் நீரில் இருக்க வேண்டிய பொஸ்பேட் அளவானது 0.20 மில்லிகிராம் என்ற மட்டத்துக்கு பதிலாக 1.04 மில்லிகிராம்களாகவும், நைதரசன் அளவானது 0.50 மில்லிகிராம் இருக்க வேண்டிய நிலையில் 3.70 மில்லிகிராம்களாகவும் சடுதியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக முறையான பராமரிப்பு இன்றியும், உரிய நியமங்களுக்கு ஏற்ப நிர்வகிக்கப்படாமையுமே இந்த நிலைக்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த நிலைமை குறித்து சுற்றாடல் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து கூட்டுக் குழுவொன்றின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திட்டக் குழுக் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மலையகப் பகுதிகளில் இருந்து அடித்து வரப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பல்வேறு இரசாயனக் கழிவுகள் போன்ற மாசுப் பொருட்கள் நீண்ட காலமாக இந்த வாவியினுள் கலப்பதே கிரெகரி வாவியின் நீர் தீவிரமாக அசுத்தமடைந்துள்ளமைக்கு முக்கிய காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, வாவியின் நீரில் இருக்க வேண்டிய பொஸ்பேட் அளவானது 0.20 மில்லிகிராம் என்ற மட்டத்துக்கு பதிலாக 1.04 மில்லிகிராம்களாகவும், நைதரசன் அளவானது 0.50 மில்லிகிராம் இருக்க வேண்டிய நிலையில் 3.70 மில்லிகிராம்களாகவும் சடுதியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக முறையான பராமரிப்பு இன்றியும், உரிய நியமங்களுக்கு ஏற்ப நிர்வகிக்கப்படாமையுமே இந்த நிலைக்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த நிலைமை குறித்து சுற்றாடல் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து கூட்டுக் குழுவொன்றின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Latest News
பால் மா, யோகட் விலை உயர்ந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்: நுகர்வோர் விவகார அதிகாரசபை விளக்கம்!
Local
30 August 2026
இலங்கை வந்தடைந்தார் நடிகை அபிராமி: 'விருமாண்டி' அன்னலட்சுமியைக் கண்டு உற்சாகத்தில் ரசிகர்கள்!
Local
30 August 2026
எல் நினோ வறட்சி: இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை
Local
30 August 2026
நீதியரசர்கள் நியமனமும் பேரணித் திட்டமும்: ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்து தயாசிறி கேள்வி!
Local
30 August 2026
ஆகஸ்ட் 31-ல் நாடு தழுவிய போராட்டம்: அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் அறிவிப்பு!
Local
30 August 2026
டொனால்ட் ட்ரம்ப் முக வடிவில் போதை மாத்திரை: உயிருக்கு ஆபத்து என நெதர்லாந்து தீவிர எச்சரிக்கை!
Local
30 August 2026
நியூயோர்க்கில் மேடிசன் ஸ்கொயர் கார்டனை முற்றுகையிடத் தயார்: ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு எதிராக வெடித்த போராட்டம்!
Local
30 August 2026
நோர்வே மன்னர் மறைவு: தனது திருமணத்தையே ஒத்திவைத்த ஒஸ்லோ முதல்வர்!
Local
30 August 2026
ட்ரம்பின் பேச்சை வைத்து கோடிகளில் பந்தயம்: 172,000 டொலருக்கும் அதிகமான அபராதம் !
Local
30 August 2026
சேறும் சகதியுமாக மாறிவரும் இமயமலை எல்லைப் பகுதி : உயர் எச்சரிக்கையில் நேபாளம் !
Local
30 August 2026