General30 August 2026

எல் நினோ வறட்சி: இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை

எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக, இலங்கையின் சுமார் 10 மாவட்டங்களில் சிறுவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பெரியவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு தீவிரமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நிபுணர் சமல் சஞ்சீவ ,இது குறித்து எச்சரித்துள்ளார்.

நீண்டகால வறட்சியினால் விவசாய உற்பத்தி குறைவு, தரமான உணவுகள் கிடைக்காமை, விவசாயிகளின் வருமான வீழ்ச்சி மற்றும் குடும்பச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றால் கிராமப்புற மற்றும் அரை-நகர்ப்புற குடும்பங்கள் சத்தான உணவைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன.

5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 5 முதல் 17 வயது வரையிலான சிறுவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.

5 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான 'திரிபோஷ' விநியோகத் திட்டம் நாட்டின் பல பகுதிகளில் ஏற்கனவே உரிய வகையில் செயற்படவில்லை எனக் சுட்டிக்காட்டியுள்ள அவர், வறட்சி நீடித்தால் நிலைமை மேலும் மோசமடையும் எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது இன்றியமையாதது" என விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes