தெற்காசியாவில் எதிர்வரும் மாதங்களில் எல்நினோ காலநிலை மற்றும் பொருளாதார ரீதியாக அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக ஐக்கிய நாடுகளின் புதிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம், உலக வானிலை அமைப்பு, ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளன.
செப்டம்பர் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கையில், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் “உயர்ந்த கவலை” என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
எல் நினோ வலுவடைந்து வருவதன் காரணமாக இந்த நாடுகளில் வழக்கத்தை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
காலநிலை மற்றும் பொருளாதார அழுத்தங்கள் ஏற்கனவே ஒன்றுடன் ஒன்று இணைந்து தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நாடுகளாக இலங்கையும் பாகிஸ்தானும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் நெருக்கடிக்கு முந்தைய நிலையை விட முறையே சுமார் 44 மற்றும் 41 சதவீதம் அதிகமாக உள்ளதுடன், பணவீக்கம் சுமார் 6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை, அக்டோபர் முதல் ஜனவரி வரையான காலப்பகுதி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்தக் காலத்தில் பொதுவாக இரண்டாவது இடைப்பருவப் பருவமழை காரணமாக நாட்டில் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும்.
இதே காலப்பகுதியிலேயே பெரும்போக நெல் அறுவடை இடம்பெறுவதால், கனமழை அல்லது வெள்ளத்துடன் அதிகரித்த எரிபொருள் மற்றும் உரச் செலவுகள் இணைந்து விவசாயிகளுக்கு மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
எதிர்வரும் மாதங்களில் நிலைமையை நெருக்கமாகக் கண்காணிக்குமாறும், இலங்கைக்கு ஏற்படக்கூடிய குறிப்பிட்ட அபாயங்களைத் துல்லியமாக மதிப்பிடுவதற்காக விரிவான நாடுகள் மட்ட ஆய்வு அவசியம் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
Latest News
மேசை டென்னிஸ் பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் தாவி சமரவீர
Local
01 September 2026
ஹோர்ட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
Local
01 September 2026
இந்திய கிரிக்கட்டுக்குள் நுழையும் ஜூனியர் சுரேஸ் ரெய்னா
Local
01 September 2026
மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரம்: பரிந்துரைக்காக அறுவர் கொண்ட குழு நியமனம்!
Local
01 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!
Local
01 September 2026
பிரித்தானியா செல்லும் முதலமைச்சர் விஜய் : மனைவியை சந்திப்பதாக வெளியாகும் பரபரப்புத் தகவல்!
Local
01 September 2026
22வது திருத்தம் தொடர்பில் சாதனை அளவாக உயர் நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல்!
Local
01 September 2026
கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது !
Local
01 September 2026
மேட்டூர் அணை திறப்பு: காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
Local
01 September 2026
தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை!
Local
01 September 2026