International02 September 2026

அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும்- ஈரானிய உயர் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்க எதிரிக்கு ஈரான் மறக்க முடியாத பாடங்களைக் கற்பிக்கும் என ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்;

தமது எக்ஸ் (x) தளத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன்,அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு கடுமையான மற்றும் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளை மற்றும் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தநிலையில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்;சியாக பஹ்ரைனில் உள்ள ஷேக் ஈசா வான்வழித் தளத்தின் மீது ஈரானிய இராணுவம் ஆளில்லா வhனூர்தி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள தளங்கள் மற்றும் ரேடார் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஜோர்டான் வான்வெளிக்குள் நுழைந்த 13 பெலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை ஜோர்டான் நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன.

மீதமுள்ள 3 ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த போதும் எவருக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்று அங்கிருந்த கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

எனினும், ஜோர்டானில் உள்ள கேம்ப் டிடின் அமெரிக்க முகாம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் புரட்சிக்கர காவல்படை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes