வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீரை வழங்கும் நோக்கில், யால தேசிய பூங்காவில் மேலதிக குளங்களை அமைக்கும் நடவடிக்கைகளை வனவிலங்கு திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
பழைய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களும் புனரமைக்கப்பட்டு வருவதாகப் பூங்கா காப்பாளர் ஏ.டி.ஆர். ரவீந்திர தெரிவித்தார்.
மாணிக் கங்கையிலிருந்து தாங்கிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரப்பப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதேவேளை, ஒக்கம்பிட்டிய மற்றும் மாளிகாவில வனக்காப்பகங்களில் உள்ள காட்டு யானைக் கூட்டங்கள், குடிநீருக்காக இரவும் பகலும் இலுக்பிட்டிய குளத்திற்கு வந்து செல்கின்றன.
எனினும், அந்த குளம் வறண்டு போயுள்ளதுடன், அதன் நடுப்பகுதியில் சேற்றுக்குளம் ஒன்று மாத்திரமே எஞ்சியுள்ளது.
நிலவும் கடும் வறட்சி காரணமாக காடுகளில் உள்ள அனைத்து நீர் வளங்களும் வறண்டு போயுள்ளதோடு, இதனால் வனவிலங்குகளே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.டி.ஆர். ரவீந்திர தெரிவித்தார்.
Latest News
புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு – கலஹா பகுதியில் சோகம்
Local
03 September 2026
இளநீர் உற்பத்தியை அதிகரிக்க 250 புதிய கிராமங்கள்: மூன்று ஆண்டு தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
Local
03 September 2026
அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்
Local
03 September 2026
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகன் விடுதலை
Local
03 September 2026
வாகன இறக்குமதி மூலம் சுங்கத்திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு
Local
03 September 2026
1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக ‘Rich Dad Poor Dad’ ஆசிரியர் தகவல்! ரொபர்ட் கியோசாகி வெளியிட்ட அதிரடித் தகவல்!
Local
03 September 2026
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Local
03 September 2026
சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
03 September 2026
இலங்கையில் ஒரே நாளில் சடசடவென அதிகரித்த தங்க விலை!
Local
03 September 2026
ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய ஜடேஜாவின் இன்ஸ்டா வரவு - மீண்டும் வைரலாகும் தோனி - ஜடேஜாவின் பாசப் பிணைப்பு!
Local
03 September 2026