General03 September 2026

கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் இடைவிலகல்: காரணம் என்ன?

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக புனர்வாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகுவதற்கு போதைபாவனையும் முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக புனர்வாழ்வு பணியகத்தின் நிர்வாக சபை பணிப்பாளர் பேராசிரியர் வசந்த சுபசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனவே பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அத்துடன் , அவர்கள் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட ஆபத்தான சூழ்நிலைகளுக்குள் செல்வதைத் தடுப்பதற்காக துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்.
Related recommendation
Hiru TV News | Programmes