General04 September 2026

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் வாரத்தில் நாட்டிற்கு வருகை தரவுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது, விரிவுபடுத்தப்பட்ட நிதியுதவி வசதி மற்றும் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் 7ஆவது மதிப்பாய்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மேற்கொள்ளப்படும் விஜயமாகும்.

குறித்த பிரதிநிதிகள் குழு, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பபஜோர்ஜியோ (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes