General04 September 2026

மட்டக்களப்பு கிரான்குளம் கடலில் வள்ளம் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, கிரான்குளம் கடலில் வள்ளம் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொருவர் நீந்தி கரையை வந்தடைந்துள்ள நிலையில், கடற்றொழிலுக்குச் சென்ற மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கிரான்குளம் பகுதியில் வசிக்கும் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட மூவர் இன்று முற்பகல் சிறிய வள்ளம் ஒன்றில் கடற்றொழிலுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த வள்ளம் கவிழ்ந்து கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வள்ளம் பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற நிலையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes