General04 September 2026

பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவு: வரலாற்றுச் சின்னம் வெளிப்பாடு!

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 66,000 ஏக்கர் அடியாகக் குறைந்துள்ளதை அடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா மாளிகை மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

பராக்கிரமபாகு மன்னரால் உஷ்ண காலத்தில் வசிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இந்த பகுதி, ஆண்டின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது.

தற்போது நீர்மட்டம் குறைந்துள்ளதன் காரணமாக சீதா மாளிகையின் பகுதிகள் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன.

எனினும், அந்த பகுதி முழுமையாக நீரிலிருந்து வெளிப்படுத்தப்படாததால், அங்கு செல்வதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.

சமுத்திரத்தின் நீர்மட்டம் மேலும் குறைவடைந்த பின்னரே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த தலத்தைப் பார்வையிட முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes