மலையகத் தொழிலாளர்களுக்கு தற்போது கிடைக்கும் வேதனம், அவர்களின் நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்குப் போதுமானதாக இல்லை என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த வேதனப் பிரச்சினை நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும், அரசாங்கம் ஒரு நாளைக்கு 200 ரூபாயும், நிறுவனங்கள் 200 ரூபாயும் சேர்த்து 400 ரூபாயையும் தருவதாகக் கூறினாலும், அரசாங்கம் மாறும்போது இந்தத் தொகை முறையாகக் கிடைக்கும் என்பதில் உறுதியற்ற தன்மை நிலவுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தோட்டங்களைப் பிரித்துக் கொடுத்து, சிறு தோட்ட உரிமையாளர் முறையைக் கொண்டுவர வேண்டும் அல்லது குத்தகைக்கு வழங்கி கொழுந்துப் பறிப்புக் கூலியை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வருவதாகவும், தேர்தல் முடிந்ததும் தோட்டத் தொழிலாளர்களை மறந்துவிடுவதாகவும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
Latest News
நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
06 September 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை நாளை ஆரம்பம் - மேலதிக பேருந்துகள் சேவையில்
Local
06 September 2026
விஜய்யை பிரதமர் வேட்பாளராக்குவதா? காங். - தவெக கூட்டணியில் புதிய திருப்புமுனை - செப்டம்பர் 9 ஆலோசனைக் கூட்டத்தின் பின்னணி!
Local
06 September 2026
தெல்தெனியவில் சட்டவிரோத விருந்து - போதைப்பொருட்களுடன் 41 பேர் கைது!
Local
06 September 2026
மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்: அதிவேகமாக 3,000 ஓட்டங்களை கடந்த இந்திய வீராங்கனை!
Local
06 September 2026
பிரபல இசையமைப்பாளர் மீது மீண்டும் அத்துமீறல் குற்றச்சாட்டு – பாடகி ஸ்வாகதா பரபரப்பு பதிவு
Local
06 September 2026
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த அஜித் : கொந்தளிக்கும் ரசிகர்கள் - இருதரப்பு வாதமாக மாறிய சமூக வலைத்தள விவாதம்!
Local
06 September 2026
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சாதனைப் படைத்த தென் ஆப்பிரிக்க இளம் வீரர்!
Local
06 September 2026
புதிய அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டு நிறைவு : தேசிய மக்கள் சக்தியின் பேரணித் தொடர் இன்று ஆரம்பம்
Local
06 September 2026
கபொத உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம் - ஆண்டின் இறுதிக்குள் பெறுபேறுகளை வெளியிடத் திட்டம்
Local
06 September 2026