General05 September 2026

நானுஓயாவில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி!

நுவரெலியா, நானுஓயா - கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் நானுஓயா மற்றும் ஹப்புத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட உடலங்களை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes