இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள அனக் க்ரக்கடோவா (Anak Krakatau) எரிமலை வெடிப்பு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக, அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இருந்து இன்று இரவு இலங்கை நோக்கிப் புறப்படவிருந்த இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்திகள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கரக்கடோவா எரிமலை இன்று தீவிரமாகச் சீற்றமடையத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாகத் தலைநகர் ஜகார்தாவின் சுகர்ணோ-ஹாட்டா சர்வதேச வானூர்தி நிலையம் உட்படப் பல வானூர்தி நிலையங்களின் சேவைகளை இந்தோனேசிய அதிகாரிகள் தற்காலிகமாகப் நிறுத்தி வைத்துள்ளனர்.
எரிமலையிலிருந்து வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளுக்குப் பரவியுள்ள சிலிக்கா துகள்கள் அடங்கிய சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள், வானூர்திகளின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எரிமலைக்கு மேற்கே உள்ள வான்பரப்பு மற்றும் இலங்கைக்குத் தெற்கே உள்ள வான்வெளி உள்ளிட்ட விரிவான பகுதிகளினூடான விமானப் பயணங்களுக்கு இந்தோனேசிய வான் போக்குவரத்து அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையே சேவைகளை முன்னெடுக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வானூர்தி நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களின் பயணப் பாதைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.
ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கரக்கடோவா எரிமலை இன்று தீவிரமாகச் சீற்றமடையத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாகத் தலைநகர் ஜகார்தாவின் சுகர்ணோ-ஹாட்டா சர்வதேச வானூர்தி நிலையம் உட்படப் பல வானூர்தி நிலையங்களின் சேவைகளை இந்தோனேசிய அதிகாரிகள் தற்காலிகமாகப் நிறுத்தி வைத்துள்ளனர்.
எரிமலையிலிருந்து வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளுக்குப் பரவியுள்ள சிலிக்கா துகள்கள் அடங்கிய சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள், வானூர்திகளின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எரிமலைக்கு மேற்கே உள்ள வான்பரப்பு மற்றும் இலங்கைக்குத் தெற்கே உள்ள வான்வெளி உள்ளிட்ட விரிவான பகுதிகளினூடான விமானப் பயணங்களுக்கு இந்தோனேசிய வான் போக்குவரத்து அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையே சேவைகளை முன்னெடுக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வானூர்தி நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களின் பயணப் பாதைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.
Latest News
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு: ஸ்ரீலங்கன் வானூர்திகள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன!
Local
06 September 2026
"அரசாங்கத்தால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது; மக்களும் இணைய வேண்டும்" - டில்வின் சில்வா வலியுறுத்தல்
Local
06 September 2026
புதிய பச்சை நிற இலக்கத் தகடு: அறியாத காவல்துறையினரால் வாகன உரிமையாளர் அசௌகரியம்
Local
06 September 2026
தேயிலை ஏற்றுமதி வருமானத்துக்கு நிகரான 1 பில்லியன் டொலர் கடத்தப்பட்டுள்ளது -ஜனாதிபதி
Local
06 September 2026
வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே வெளிநாடு சென்றார் பிரேமலால் ஜயசேகர: சிஐடி தகவல்
Local
06 September 2026
மின் நுகர்வு குறைவு; மின் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்
Local
06 September 2026
Lanka Chairman's Business Excellence Awards 2026: 'ஹிரு' ஊடகக் குழுமம் பல விருதுகளை வென்று சாதனை!
Local
06 September 2026
துலீப் கிண்ணம் 2026 இறுதிப்போட்டி: முதல் நாளில் East Zone அணி வலுவான தொடக்கம்!
Local
06 September 2026
22 ஆவது திருத்தம் தொடர்பான தீர்மானம் கிடைத்ததும், விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி
Local
06 September 2026
துலீப் டிராபி 2026: சிராஜின் பந்துவீச்சை விளாசிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி!
Local
06 September 2026