General07 September 2026

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இரு வானூர்தி சேவைகள் இரத்து!

இந்தோனேசியாவில் உள்ள அனாக் க்ரக்கடாவ் (Mount Anak Krakatau) எரிமலை வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட சாம்பல் மேகங்கள் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இரு வானூர்தி சேவைகள் இன்று (07) இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, கொழும்பிலிருந்து ஜகார்த்தா நோக்கிய UL 364 மற்றும் ஜகார்த்தாவிலிருந்து கொழும்பு நோக்கிய UL 365 ஆகிய வானூர்திகளின் பயணங்களே இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலையிலிருந்து வான்நோக்கிப் பரவிய அடர்ந்த சாம்பல் மேகங்கள் காரணமாக, இந்தோனேசியாவின் ஜகார்த்தா பிரதான சர்வதேச வானூர்தி நிலையம் உள்ளிட்ட பல வானூர்தி நிலையங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes