General07 September 2026

தெஹிவளையில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரின் மைத்துனர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு

தெஹிவளை பகுதியில் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கொஸ் மல்லி” என அறியப்படும் நபரின் மைத்துனர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு பேர் அடங்கிய குழுவினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டு, கூட்டாக குறித்த நபரைத் தாக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes