General10 September 2026

நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஜெனீவா நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பாக, இலங்கை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச ஜெனீவாவில் உள்ள நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்திடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டுக் கடிதமொன்றைக் கையளித்துள்ளார்.

ஐரோப்பாவைச் சேர்ந்த சட்டத்தரணிகளால் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிவில் சமூக அமைப்பு ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிலிந்த ராஜபக்ச, அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றியபோது, இலங்கையில் தனிநபர் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நிறுவனங்களின் சமநிலை என்பவற்றுக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்துக் கவலை வெளியிட்டிருந்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கைதுகள் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சியும் தெரிவுசெய்யப்பட்ட வழக்குகளும் தெளிவாகத் புலப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் அண்மைய கைது நடவடிக்கையையும் பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.


Related recommendation
Hiru TV News | Programmes