நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி தொடர்வதைத் தவிர்த்து, அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீளாய்வு செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், நிகழ்ச்சி நிரல் 2 இன் கீழான பொது விவாதத்தில் உரையாற்றிய ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சுமித் தசாநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் வளங்கள் ஆயுத மோதல்கள், மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் இடம்பெயர்வு உள்ளிட்ட உலகின் அவசரமான மனித உரிமை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நாட்டுக்கே உரிய ஆணைகள் தெளிவான நோக்கங்கள் மற்றும் அளவிடக்கூடிய பெறுபேறுகளின் அடிப்படையில் அவ்வப்போது மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பொருத்தமான சந்தர்ப்பங்களில் நாட்டுக்கே உரிய தீர்மானங்களில் காலாவதி விதிகள் மற்றும் படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவரும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
தேசிய பொறிமுறைகள், கலந்துரையாடல், ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி மூலம் ஒரு நாடு மனித உரிமைகள் துறையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், அந்த நாட்டுக்கான ஆணையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெளிவான பாதை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய பொறிமுறைகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த முன்னேற்றத்தை மனித உரிமைகள் பேரவை அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஆணைகள் தொடர்வது நிறுவன ரீதியான தொடர்ச்சிக்காக அல்லாமல், தெளிவாக நிரூபிக்கப்படும் தேவை மற்றும் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் தூதுவர் சுமித் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான மனித உரிமைகள் நிலைமையின் எழுத்துமூல புதுப்பிப்பு அறிக்கை நேற்று மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் ஆலோசனை
Local
12 September 2026
லண்டன் செல்கிறாரா கீர்த்தி சுரேஷ்? நக்கலாக பதிலடி
Local
12 September 2026
ரஷ்ய ஜனாதிபதிக்கு திருக்குறளை பரிசளித்தார் மோடி!
Local
12 September 2026
லண்டன் வாழ் தமிழர்களை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்
Local
12 September 2026
18 ஆண்டு உலக சாதனையை சமன் செய்தார் பாகிஸ்தானின் அறிமுக வீரர் ரசாவுல்லா!
Local
12 September 2026
அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகளும் ஆதரவும் தற்போது குறையத் தொடங்கியுள்ளது: செல்வம் அடைக்கலநாதன்
Local
12 September 2026
வான்கடே மைதானத்தின் சிறப்பு வரவேற்பறைகளுக்கு சூட்டப்படவுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்: மும்பை கிரிக்கெட் சங்கம் தீர்மானம்!
Local
12 September 2026
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசைதிருப்பும் தற்போதைய அரசு: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
Local
12 September 2026
அஜித் - விஜய் சந்திப்பால் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன
Local
12 September 2026
சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை
Local
12 September 2026