இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் (Cross-border Letters of Credit - LCs) தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1,000 வாகனங்களை விரைவாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பிரச்சினை காரணமாக நீண்ட காலமாக வாகனங்களை விடுவிக்க முடியாமல், தாம் பல்வேறு சிரமங்களையும் நிதி இழப்புகளையும் எதிர்கொண்டு வருவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, தற்போது காணப்படும் சட்டரீதியான மற்றும் தொழில்நுட்ப தடைகளை நிவர்த்தி செய்து, துறைமுகங்களில் சிக்கியுள்ள வாகனங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த விடயத்தில் அதிகாரிகளின் துரிதமான தலையீட்டை எதிர்பார்த்துள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Latest News
வாகனப் பதிவு எண் நிலுவை: ஆறு மாதங்களில் தீர்க்கப்படும் என எதிர்பார்ப்பு
Local
09 September 2026
பேரழிவில் கைக்கொடுத்த இந்தியா: பிரதமர் ஹரிணியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
Local
09 September 2026
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026
திருமணம் ஒரு கட்டாயமல்ல; வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம்: நடிகை ரம்யா பரபரப்பு கருத்து!
Local
09 September 2026
தவெக கூட்டணியின் அதிரடி வியூகம் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர்!
Local
09 September 2026
குடியிருப்புகளுக்கு அருகில் உலா வரும் சிறுத்தை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
09 September 2026
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026
பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
09 September 2026
நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
Local
09 September 2026
நடிகர் அஜித்தின் மறுபக்கம்: படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அன்பு குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி!
Local
09 September 2026