மலேரியா நோயற்ற நிலையைத் தொடர்ந்து பேணி வருவதுடன், ரணஜன்னி அல்லது ஏற்புவலி (Tetanus) நோயை வெற்றிகரமாக ஒழித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பால் (WHO) இலங்கைக்கு விசேட சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
திமோர்-லெஸ்டேவின் டிலி நகரில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79ஆவது அமர்வின் போது, உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயசஸ் (Dr. Tedros Adhanom Ghebreyesus) இந்தச் சான்றிதழை சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கினார்.
கடந்த 2016ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பினால் மலேரியா அற்ற நாடாகச் சான்றிதழ் பெற்ற இலங்கை, நோய் மீண்டும் பரவுவதைத் தடுத்து இந்த நிலையைத் தொடர்ச்சியாகப் பேணி வருகிறது.
மாலைத்தீவுக்கு அடுத்தபடியாக தென்கிழக்காசிய பிராந்தியத்தில் மலேரியாவை முழுமையாக ஒழித்த இரண்டாவது நாடு என்ற பெருமையை இலங்கை கொண்டுள்ளது.
மேலும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நாடு தழுவிய ஏற்புவலி தடுப்பூசித் திட்டங்கள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம், ஏற்புவலி நோயையும் ஒரு தசாப்த காலமாக இலங்கை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது.
நாட்டின் பலமான முதற்கட்ட சுகாதாரப் பாதுகாப்பு முறைமை, தேசிய அர்ப்பணிப்பு, உயர் தடுப்பூசி வழங்கல் மற்றும் சிறந்த நோய் கண்காணிப்பு வழிமுறைகளே இந்த மைல்கற்களை எட்டுவதற்குக் காரணமாக அமைந்ததாக உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.
இத்தகைய சாதனைகள் இலங்கையர்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதோடு, எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கவும் வழிவகுத்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
Latest News
பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் - பிரதமர்
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் – இலக்கு தவறியதால் இரு சிறார்கள் உயிரிழப்பு
'டிசி' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக BMW X7 சொகுசு சிற்றுந்து பரிசு
வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் ஒக்டோபர், நவம்பரில் மழைக்கு வாய்ப்பு
கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் - திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம்
கொங்கோவில் தீவிபத்து: மாணவர்கள் உட்பட்ட பலர் பலி
யோஷித ராஜபக்ச வழக்கில், பொய் சாட்சியம் - மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது
குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 750,000 ரூபாய் அபராதம்