General11 September 2026

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் – இலக்கு தவறியதால் இரு சிறார்கள் உயிரிழப்பு

தெஹிவளை – சிறிசங்கபோ வீதியில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல், தவறான இலக்கில் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் இரு சிறார்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை காயமடைந்துள்ளார்.

விசாரணைகளில், காயமடைந்த நபரின் சகோதரர், திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான படோவிட்ட அஸங்கவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘கொஸ்மல்லி’ என்பவரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes