General12 September 2026

எதிர்வரும் நாட்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இற்றைப்படுத்தப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, பல முக்கிய மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் கணிசமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes