செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச தரத்துக்கு அமைவான, நம்பகமான மற்றும் வெளிப்படைத்தன்மையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் இலங்கையை வலியுறுத்தியுள்ளதுடன், பொறுப்புக்கூறல் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நாடாளுமன்ற இணையமைச்சர் கிறிஸ் எல்மோர் (Chris Elmore) நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு தொடர்பான முன்னேற்றங்களை பிரித்தானியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதில் சர்வதேச உதவியைப் பெற்றுக்கொள்வது குறித்தும் பரிசீலிக்குமாறு ஊக்கமளிப்பதாகக் கூறினார்.
மேலும், இந்த விசாரணைகளில் அறிவியல் ரீதியான தடம்சார் தடயவியல் பாதுகாப்புகளும் (forensic safeguards), காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் அர்த்தமுள்ள பங்கேற்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்கள் குறித்து பிரித்தானிய உயர் அதிகாரிகள் இலங்கைத் தலைவர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த மே மாதம் இலங்கைப் பிரதமர் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தபோதும், கடந்த பெப்ரவரி மாதம் பிரித்தானிய முன்னாள் பிரதிப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தபோதும் இந்த விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையிலும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர், இலங்கை வெளிவிவகார அமைச்சருடனும் யாழ்ப்பாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) இலங்கை தொடர்பான முக்கிய நாடுகளின் கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவதன் மூலமும், ஐநாவின் பொறுப்புக்கூறல் வழிமுறைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமும் இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய பிரித்தானியா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் கிறிஸ் எல்மோர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நாடாளுமன்ற இணையமைச்சர் கிறிஸ் எல்மோர் (Chris Elmore) நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு தொடர்பான முன்னேற்றங்களை பிரித்தானியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதில் சர்வதேச உதவியைப் பெற்றுக்கொள்வது குறித்தும் பரிசீலிக்குமாறு ஊக்கமளிப்பதாகக் கூறினார்.
மேலும், இந்த விசாரணைகளில் அறிவியல் ரீதியான தடம்சார் தடயவியல் பாதுகாப்புகளும் (forensic safeguards), காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் அர்த்தமுள்ள பங்கேற்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்கள் குறித்து பிரித்தானிய உயர் அதிகாரிகள் இலங்கைத் தலைவர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த மே மாதம் இலங்கைப் பிரதமர் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தபோதும், கடந்த பெப்ரவரி மாதம் பிரித்தானிய முன்னாள் பிரதிப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தபோதும் இந்த விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையிலும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர், இலங்கை வெளிவிவகார அமைச்சருடனும் யாழ்ப்பாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) இலங்கை தொடர்பான முக்கிய நாடுகளின் கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவதன் மூலமும், ஐநாவின் பொறுப்புக்கூறல் வழிமுறைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமும் இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய பிரித்தானியா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் கிறிஸ் எல்மோர் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
க.பொ.த சாதாரண தர பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைப்பு:பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்!
Local
14 September 2026
குருநாகல் - மஹவ பகுதியில் தீ விபத்து: கணினி நிலையத்திற்குள் நேர்ந்த பெரும் சேதம்!
Local
14 September 2026
வெனிஸ் விழாவில் விருது பெற்ற ஆவணப்படம்: சொந்த நாட்டு இயக்குநர்கள் மீது பாயும் ‘தேசதுரோக’ குற்றம்!
Local
14 September 2026
மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
Local
14 September 2026
அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு!
Local
14 September 2026
வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்: பேராபத்தில் தெற்காசிய பிராந்தியம்! - ஆய்வில் தகவல்
Local
14 September 2026
இலங்கை - தாய்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து : சட்டபூர்வ பாதுகாப்புடன் 10,000 வேலைவாய்ப்புகள்
Local
14 September 2026
லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு – 7000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Local
14 September 2026
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
Local
14 September 2026
எல் நினோ அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாரா? - அணுகுமுறையை மாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு
Local
14 September 2026