General15 September 2026

அபிவிருத்தி என்பது தொண்டு அல்ல, அது அடிப்படை மனித உரிமை: ஐநாவில் வலியுறுத்திய இலங்கை

அபிவிருத்தி என்பது ஒருபோதும் தொண்டாகப் பார்க்கப்படக் கூடாது, மாறாக அது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரிய அடிப்படை மனித உரிமையாகும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் தசநாயக்க சர்வதேச சமூகத்திடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் உரை நிகழ்த்தியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நான்கு தசாப்தங்களுக்கு முன்பே அபிவிருத்தி என்பது, ஒவ்வொருவரும் அனுபவிக்க உரிமையுள்ள பிரிக்க முடியாத உரிமை என்பதைப் பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளதாக சுமித் தசநாயக்க சுட்டிக்காட்டினார்.

எனவே, அபிவிருத்திக்கான உரிமையையும் ஏனைய மனித உரிமைகளைப் போலவே சமமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியுள்ள அவர், முன்மொழியப்பட்டுள்ள 'அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு' இலங்கையின் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes