General15 September 2026

உயிர்த்த ஞாயிறு விசாரணை: தேஷபந்து உட்பட மூவர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றத் தீர்ப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் போது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி காவல்துறை மாஅதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் காவல்துறைமாஅதிபர் தேஷபந்து தென்னகோன் உட்பட மூவர் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த அடிப்படை உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகச் செயற்பட்டு, இவ்விரு அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகளை நடத்தியதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உயர் நீதிமன்றம், முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேஷபந்து தென்னகோன், பிரதம காவல்துறை பரிசோதகர் இந்திக சில்வா மற்றும் பிரதி காவல்துறை மாஅதிபர் பாலித சிறிவர்தன ஆகிய மூவரும் இதற்குக் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எனத் தீர்ப்பளித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes