General15 September 2026

காவல்துறை தகவலாளரின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கைது

காவல்துறை தகவலாளர் ஒருவரின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர், செல்ல கதிர்காமம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை தகவலாளர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கடந்த ஆண்டு கிரிந்த பகுதியில் 325 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் இந்த விவகாரம் தொடர்புடையது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் தகவல் வழங்கிய காவல்துறை தகவலாளரை இலக்கு வைத்து, குறித்த மரணம் தொடர்பாக திட்டம் தீட்டப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Related recommendation
Hiru TV News | Programmes