General16 September 2026

களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

அனுராதபுரம் புனித நகருக்குச் செல்வதற்காக களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்தை நோக்கி தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள், தொடருந்து மோதியதில் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 53 மற்றும் 58 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes