General16 September 2026

நாட்டை விட்டு வெளியேற முயற்சியா? - சிரந்தி ராஜபக்ஷ விவகாரத்தில் வெளியான உண்மைப் பின்னணி!

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவான FCIDயில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகள் பொய்யானவை என, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஷிராந்தி ராஜபக்ஷ தனியார் மருத்துவமனையிலிருந்து நேரடியாக வானூர்தி நிலையத்திற்குச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், FCIDயில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு இதற்கு முன்னர் ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 12.50க்கு வானூர்தி புறப்படவிருந்த நிலையில், வானூர்தி நிலைய வாயிலுக்கு அருகில் வைத்தே அதிகாரி ஒருவர் குறித்த கடிதத்தை ஷிராந்தி ராஜபக்ஷவிடம் கையளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டதாக ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எனவே, FCID-யிலிருந்து இதற்கு முன்னர் ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும், குறித்த கடிதமும் அவர் வானூர்தி நிலையத்திற்கு வருகை தந்த பின்னரே கையளிக்கப்பட்டதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes